தீவிர சிகிச்சை பிரிவில் காதல் கணவன்.. மருத்துவர்கள் சொன்ன வார்த்தைய கேட்ட மனைவி எடுத்த விபரீத முடிவு!!

67

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் (22) என்பவர் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் துரித உணவு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் பூபாலன் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பூபாலன், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பூபாலனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதைக் கேட்டு கணவனை கவனித்து வந்த மேகலா, திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அப்போது பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அருகே உள்ள மரத்தில் மேகலா தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷம் குடித்த பூபாலன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் மேகலாவிடம் கூறியதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.

இதையறிந்த பூபாலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.சேலம் அரசு மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காதலின் மனைவி தற்கொலை செய்து கொண்டதுடன், கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous article“என்னை உறவுக்குக் கட்டாயப்படுத்துகிறார்” – மாமியார் மீது காவல்துறையில் புகாரளித்த மருமகள்!!
Next article13 வயது சிறுமி அமீபிக் வைரஸ் தாக்கி உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!!