பணியில் இருந்து திடீரென நீக்கம் விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு,,, சிக்கிய கடிதம்!!

45

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டம், குண்டலுப்பேட்டை தாலுக்கா பேரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் (28). இவர் டி.நரசிப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கிரண் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்ந்த நரசிம்பூர் போலீசார் கிரண் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் கிரண் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், எனது தற்கொலைக்கு காரணம் நரசிப்பூரில் உள்ள சாய் கார்மென்ட்டை சேர்ந்த எச்ஆர்ஏஜிஎம் லோகேஷ் மற்றும் எச்ஆர்ஏஜிஎம் அனில் என்று எழுதப்பட்டிருந்தது. அதில், “என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.

என்னைப் பற்றி மோசமான கருத்து தெரிவித்துள்ளனர், அதனால் நான் எங்கும் பணியமர்த்தப்படவில்லை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரண் தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Previous articleதள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்… பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்!!
Next articleபாசமாக அழைத்த தம்பி.. நம்பி சென்ற காதல் தம்பதி ஆணவ கொலை.. 11 பேர் மீது வழக்குப்பதிவு!!