கருக்கலைப்பில் மனைவி மரணம்; உடலையும், 2 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய கொடூர கணவன்…!!!

40

கருக்கலைப்பின் போது 25வயதேயான தனது மனைவி உயிரிழந்தது தெரிந்ததும், மனைவியின் உடலையும் இரு குழந்தைகளையும் சேர்த்து ஆற்றில் வீசி அதிர செய்திருக்கிறான் கொடூரமான கணவன்.புனேவில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் கணவனையும், உடந்தையாக இருந்த நண்பனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த ஜூலை 9ம் தேதி, பெண்ணின் காதலரும் முக்கிய குற்றவாளியுமான கஜேந்திர தகட்கைரே, பாதிக்கப்பட்ட 25 வயதான பெண்ணை கருக்கலைப்பு செய்ய மும்பைக்கு அருகிலுள்ள தானேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும், கருக்கலைப்பின் போது பெண் இறந்துள்ளார். அதன் பின்னர் தகட்கைரே அவரது நண்பர் ரவிகாந்த் கெய்க்வாட் என்பவருடன் சேர்ந்து மனைவியின் உடலை எடுத்துச் சென்று இந்திராயணி ஆற்றில் வீசியுள்ளார்.

இந்த பயங்கரமான காட்சியைப் பார்த்ததும், அவருடைய 2 மற்றும் 5 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் அழ ஆரம்பித்துள்ளனர். அதன் பின்னர் தான் அந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. தனது இரு குழந்தைகளையும் நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசிக் கொன்றுள்ளார் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

உயிரிழந்த இளம்பெண் ஏற்கெனவே தனது கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வரும் நிலையில், தகட்கைருடன் உறவில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கர்ப்பமடைந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், காணாமல் போன இளம்பெண்ணின் புகைப்படத்துடன் போலீசாரை அணுகியதை அடுத்து, போலீசார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியபோது, ​​இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தகட்கைரே மற்றும் கெய்க்வாட் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

இளம்பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தகட்கைர் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ஜூலை 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

Previous articleசென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!
Next articleகழுத்தை நெரிக்கும் கடன் ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளரான தொழிலாளி….!!!