சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

42

சென்னை தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பாரத் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்ய ஜீவன். 19 வயதேயாகும் நித்யஜீவன் தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். ராஜகீழ்பாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பார்ட் டைம் வேலைப் பார்த்துக் கொண்டே மாணவி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

நித்யஜீவனின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கணவருக்கு உதவியாக அவரது தாயாரும் மருத்துவமனையில் இருந்து கவனித்து வந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த நித்யஜீவனை, அவரது தாயார் நீண்டநேரம் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், செல்போனை எடுத்து பேசாததால், அருகிலேயே இருக்கும் அவரது சகோதரிடம் விஷயத்தைக் கூறி, வீட்டிற்கு சென்று பார்க்க கூறியிருக்கிறார்.

நித்யஜீவனின் சகோதரி வீட்டுக்கு சென்று நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் நித்யஜீவன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி நித்ய ஜீவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்

Previous articleசவாலால் விபரீதம்… அளவுக்கு மீறி சாப்பிட்டதால் உயிரிழந்த பெண் யூடியூபர்…!!!
Next articleகருக்கலைப்பில் மனைவி மரணம்; உடலையும், 2 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய கொடூர கணவன்…!!!