டியூசன் என்ற பெயரில் பாலியல் உறவு 10ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசம் ஆசிரியை போக்சோவில் கைது…!!!

138

சிவகாசியில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி சிவானந்தா நகர் காலனி 4வது தெருவில் வசிக்கும் திருப்பதி மகள் பவித்ரா (வயது 24).

எம்.ஏ., பட்டதாரியான இவருக்கும், சிவகாசி அருகே, திருத்தங்கல் – பள்ளபட்டி ரோடு, முத்துமாரியம்மன் காலனி, 2வது தெருவில் வசிக்கும் ஜேசுராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பட்டதாரியான பவித்ரா சில தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், திருத்தங்கல்- பள்ளப்பட்டி ரோடு முருகன் காலனியை சேர்ந்த விவசாயி அருண்பிரபு (வயது 39) என்பவரின் 16 வயது மகன் (வினுபிரசாத்) கடந்த கல்வியாண்டில் பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, ​​பள்ளி மாணவன் டியூசனில் படிப்பதற்காக பவித்ராவிடம் வந்துள்ளார்.

அப்போது, ஆசிரியை பவித்ராவுக்கும், வினு பிரசாத்துக்கும் இடையே தகாத பாலுறவு நடந்ததாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில், 16 வயது சிறுவன் வினுபிரசாத் கல்வியைத் தொடராமல் பள்ளிக்குச் செல்லாமல் கூலி வேலைக்குச் சென்றான், கணவனைப் பிரிந்த ஆசிரியை பவித்ரா வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சிவானந்தா நகர் காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சிறுவன் வினு பிரசாத்தை பவித்ரா வெளியூருக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, மகன் காணவில்லை என தந்தை அருண்பிரபு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ​​பவித்ரா, சிறுவன் வினுபிரசாத் ஆகிய இருவரையும் போலீஸார் கண்டுபிடித்து விருதுநகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனிடையே, சிறுவன் வினுபிரசாத் தந்தை அருண்பிரபு அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து ஆசிரியை பவித்ராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட 16 வயது சிறுவன் வினுபிரசாத், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Previous articleபல ஆண்களுடன் தொடர்பு கண்டித்த கணவனை சைலண்டா தீர்த்து கட்டிய மனைவி 4 மாதங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!
Next articleமகன் இறந்த தேதியில் தாயும் தற்கொலை தனியே தவிக்கும் கணவர், மகள்…!!!