கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் பலி…!!!

49

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்றது. இங்கு உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்த நிலையில் இந்தப் பணியில் சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்தனர்.

இந்த பணியில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பழனி கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். நேற்று மாலை கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்

துகொண்டிருந்தபோது திடீரென பழனி கால் தவறி கீழே விழுந்து விட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார்.

சிவனடியார் பழனியின் உயிரிழப்பு குறித்து திருவான்மியூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில் சுத்தம் செய்யும் பணியில் சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஓயாமல் சண்டை குடும்பம் நடத்த அழைத்த கணவர் வர மறுத்த மனைவியை கதறவிட்டு கொடூர கொலை…!!!
Next articleஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி.. போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்…!!!