பைக் உரசி தகராறு இளம்பெண் சுட்டுக்கொலை…!!

46

தலைநகர் டெல்லியின் கோகல்புரி பகுதியில் பறக்கும் சாலையில் பைக், கார் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில், சிம்ரன்ஜீத் கவுர் (30) மற்றும் அவருடைய கணவர் ஹீரா சிங் (40) ஆகிய 2 பேரும் பைக் ஒன்றில் சென்றனர்.

அப்போது, இவர்களுடைய பைக் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது உரசுவது போல் சென்றுள்ளது. இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில், சிம்ரன்ஜீத் கவுரின் நெஞ்சு பகுதியின் மேற்பாகத்தில், கழுத்துக்கு அருகே குண்டு துளைத்தது. இதனை தொடர்ந்து, மனைவியை தூக்கி கொண்டு ஜி.டி.பி.மருத்துவமனைக்கு ஹீரா சிங் சென்றார்.

எனினும், அதில் பலனில்லை. அதற்கு முன்பே சிம்ரன் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவானது. சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், கடந்த 20-ந்தேதி ஸ்கூட்டரில் 2 குழந்தைகளுடன் சென்ற 27 வயது ஜெரிலின் டி சில்வா என்ற இளம்பெண் ஒருவரை, காரில் பின்தொடர்ந்த ஆடவர் ஒருவர் அவரை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், அவருக்கு வழி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஸ்கூட்டரை முந்தி சென்று குறுக்காக காரை நிறுத்தினார். இதன்பின் காரில், ஆத்திரத்தில் இருந்த நபர் கீழே இறங்கி, ஜெரிலினின் தலைமுடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தி, தாக்கினார்.

அதேபோல் புனே நகரில், கடந்த 2 மாதங்களுக்கு முன் 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் 2 ஐ.டி. நிறுவன இளைஞர்கள் உயிரிழந்தனர்.

Previous articleகாதல் கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த கொடூர மனைவி என்ன காரணம் தெரியுமா?
Next articleகர்ப்பிணி மனைவியை வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் காரில் ஏற்றிச் செல்லும் கணவன்…!!!