பப்பில் தோழியுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி…!!!

31

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து புறப்பட்டு படிப்பதற்காக இந்த கல்லூரிக்கு வந்துள்ளார். ராமாபுரத்தில் உள்ள பிஜி ஹாஸ்டலில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார் சுகைல்.

அப்போது அவர் அங்கு உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பப்பில் தனது தோழிகளுடன் சுகைல் நடனமாடிக் கொண்டிருந்தார். தோழிகளுடன் பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த போதே திடீரென முகமது சுகைல் சுருண்டு கீழே விழுந்தார்.

திடீரென முகமது சுகைல் மயங்கி கீழே விழுவதைப் பார்த்து உடன் நடனமாடிக் கொண்டிருந்த அவரது தோழிகள் பதறியடித்தப்படி அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சுகைலைப் பரிசோதித்த மருத்துவர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப், கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது என்றும் ஒரு நபருக்கு உள்ளே நுழைவு கட்டணமாக மட்டுமே 1,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. எனினும் கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் உட்கொண்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Previous articleவீட்டில் தனியே இருந்த இளம்பெண் நகைக்காக கழுத்தறுத்துக் கொலை….!!!
Next articleவேணா விட்டுடுங்க கதறிய சிறுமி அடுத்த நொடியே பரிதாபமாக பலியான சோகம்…!!!