காணாமல் போன நர்ஸ் கணவனை அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!!

31

அமெரிக்காவில் மனைவி காணாமல் போன விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நரேஷ் பட். 28 வயதான இவர் தனது மனைவி மம்தா கபீல் பட் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் மனாசஸ் பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளார். நேபாளம் நாட்டைச் சேர்ந்தவரான மம்தா கபீல் பட் ( வயது 28) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மம்தா கபீல் பட் சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து நரேஷ் பட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கவலையுடன் கோரிக்கை வைத்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

கடைசியாக கடந்த ஜூலை 27ஆம் தேதி மருத்துவமனை பணிக்குச் சென்ற மம்தா அதன்பிறகு அவர் பணிக்கு செல்லவில்லை. மறுநாள் தனது நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார். ஜூலை 31ஆம் தேதிக்கு இரவு டின்னர் முடித்த பிறகு அவரை பார்க்கவில்லை என்று கணவர் நரேஷ் பட் கூறினார்.

மருத்துவமனையில் இருந்து சக ஊழியர்கள் அவரை தொடர்புகொள்ள முயன்ற போதிலும் அவர்களால் முடியவில்லை. இதனையடுத்து, காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில், ஆகஸ்ட் 2ம் தேதி போலீசார் அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவர் தனது மனைவி காணாமல் போனதாக சொல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகே ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது மனைவி காணாமல் போனதாக புகார் அளித்தார்.

தனது மனைவி காணாமல் போவது இது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே மூன்று முறை காணாமல் போய் திரும்பி வந்தார் என்றும், தற்போதுதான் நீண்ட காலம் காணவில்லை என்றும் நரேஷ் பட் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், தம்பதியரின் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு இரவு உணவின் போது தனது மனைவியை பார்த்ததாக நரேஷ் பட் போலீசாரிடம் தெரிவித்தார். அத்துடன், போலீசாருக்கு ஒத்துழைப்பதையும் அவர் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் மம்தா கபீல் பட் காணாமல் போனது தொடர்பாக அவரது உடலை மறைத்து வைத்ததாக சந்தேகித்து கணவர் நரேஷ் பட்டை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். எனினும், அவரது மனைவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் கூட தெரியவில்லை. அதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. நரேஷ் பட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தம்பதியரின் ஒரு வயது மகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Previous articleஇறந்த 10 நாள்களில் உயிரோடு வந்த நபர் – கர்நாடகத்தை உலுக்கிய கொலைகார தம்பதியின் குட்டு அம்பலம்…!!!
Next article‘என் கழுத்தைத் தொட்டு முடியை விலக்கி…’; இயக்குனர் ரஞ்சித் மீது நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார்…!!!