லவ்வருடன் ஹோட்டல் அறையில் வாக்குவாதம் காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்….!!!

44

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (27). புகைப்பட கலைஞரான இவர், அதே பகுதியை சேர்ந்த அபூர்வா (22) என்பவரை காதலித்து கடந்த 10.2.2023 அன்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் “அலைபாயுதே” திரைப்பட பாணியில் வீடுகளில் இருந்து அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர். மேலும் முறைப்படி திருமணம் நடக்கும் வரை இருவரும் இதே நிலையில் தொடர முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு சுப்பராயபிள்ளை சாலையில் உள்ள தனியார் விடுதியில் பிரதீப் தனது காதல் மனைவி அபூர்வாவுடன் தங்கியிருந்தார். கடந்த 20ம் தேதி இரவு லாட்ஜின் மாடி அறையில் இருந்து அபூர்வாவை தோளில் தூக்கிக்கொண்டு பிரதீப் கீழே வந்துள்ளார்.

இதைப் பார்த்த விடுதிக் காப்பாளர் கார்த்திக் (30) பிரதீப்பிடம் என்ன நடந்தது? கேட்டபோது அபூர்வா மயங்கி விழுந்துவிட்டதாக கூறி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக், அபூர்வாவுக்கு முகம் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு, விடுதிக்கு திரும்பிய அவர், இது குறித்து பிரதீப்பிடம் கேட்டுள்ளார். அபூர்வாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் தாக்கியதாக கூறிய நிலையில், அதிர்ச்சியடைந்த கார்த்திக், சம்பவம் குறித்து ஓட்டல் மேலாளரிடம் தெரிவித்து பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனால், வழக்கை கொலை வழக்காக மாற்றி, அபூர்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் அவரது தாய் சுதாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் உறவினர்கள் அபூர்வாவின் உடலை வம்பாகீரப்பாளையத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.

இதற்கிடையில், அபூர்வா தனக்குப் பதிலாக வேறொருவருடன் பேசியதால் ஆத்திரமடைந்த பிரதீப், காதலியின் முகத்தைத் தாக்கி, விடுதி அறையின் சுவரில் அவரது தலைமுடியைப் பிடித்து தாக்கி காயப்படுத்தியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கொலைக்கான முழு காரணம் தெரியாத நிலையில் 2 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரதீப்பை கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க கிழக்கு எஸ்பி லட்சுமி சவுதன்யா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்காக 3 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி புதுச்சேரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர். போலீஸ் விசாரணையின் முடிவில், அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொன்றாரா அல்லது சம்பவத்தன்று விடுதியில் வேறு ஏதேனும் சம்பவம் நடந்ததா? இதற்கான முழு காரணமும் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleமின்சாரம் தாக்கிய கணவரைக் காப்பாற்றி இளம்பெண் உயிரிழப்பு….!!!
Next articleவிஷமானது உணவு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மாணவி திடீர் மரணம்……!!!