7 வயது சிறுவனை கடத்தி ரகசிய திருமணம் 22 வயது இளம்பெண்ணுக்கு வலைவீச்சு…!!

12

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தனியார் காலணி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார்.

சிறுவனுடன் இந்த இளம்பெண், கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுவனிடம் காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இளம்பெண், சிறுவனை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. பின்னர், இரு வீட்டாரும் விசாரித்தபோது, ​​ஆசை வார்த்தைக் கூறி சிறுவனை அழைத்து சென்ற இளம்பெண் குடியாத்தம் அருகில் உள்ள சிந்தகணவாய் முனீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இளம்பெண் இன்னும் சிறுவனுடன் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்படி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் இளம்பெண்ணை தேடி வருகின்றனர். 17 வயது சிறுவனை இளம்பெண் கடத்தி திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசொத்து விவகாரம் விஏஓ அலுவலகத்தில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை.. மகன் வெறிச்செயல்…..!!!
Next articleபோதை மாத்திரை விற்பனை.. கண்டித்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்.. அதிர்ச்சி பின்னணி…!!