ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் அரக்கோணத்தில் பரபரப்பு….!!

21

அரக்கோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ட்ந்த தாயும், இரு பிள்ளைகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது போலீசாரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வளர்புரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஜயன் நேருஜி நகர் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.

இதனிடையே மனைவி மீனாட்சி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பவித்ரா டைப்ரைட்டிங் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். மகன் யுவனேஷ் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

ஆனால் நேற்று இரவு வீட்டில் மீனாட்சி, பவித்ரா, யுவனேஷ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உறவினர் கொடுத்த தகவலின் பேரில் அரக்கோணம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தாய், மகள், மகன் ஆகியோர் தரையில் சடலமாக கிடந்தனர்.

இதையடுத்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்காம்பறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தொங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு இருந்தது தெரியவந்தது. மேலும் மூவரின் கழுத்தில் தூக்கில் தொங்கிய தழும்புகள் இருந்ததால், சந்தேக மரணம் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் விஜயன் தலைமறைவானார். இவர்களது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், ஒரே அறையில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், 3 பேரையும் கொன்று விட்டு ஓடியவர் யார்? கொலையா? அல்லது தற்கொலையாக சித்தரிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரக்கோணம் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவீடியோ காலில் கணவனுடன் பேசிக் கொண்டே பெட்ரோ ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம் மனைவி….!!
Next articleவிமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை…!!