வீடியோ காலில் கணவனுடன் பேசிக் கொண்டே பெட்ரோ ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம் மனைவி….!!

18

இதெல்லாம் மனுஷ ஜென்மமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இன்னொடு காதல் இருந்தால், என்ன இவனுங்க எல்லாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? என்று அந்த பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

கணவனுக்கு திருமணத்தை மீறிய உறவு இன்னொரு பெண்ணுடன் இருந்தது தெரிய வந்த நிலையில், வீடியோ காலில் கணவனுடன் பேசியபடியே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளம்மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவனின் நடத்தைக் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியும், அவர்களும் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல், சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு உளிமாவு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஹரி. இவருடைய மனைவி அனுஷா.

இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ள நிலையில், திருமணமான நாள் முதலே ஸ்ரீஹரி தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. ஸ்ரீஹரிக்கு திருமணத்திற்கு முன்பிருந்தே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது குறித்து அனுஷா தனது பெற்றோரிடம் புகார் கூறியதும், அவர்கள் அனுஷாவுக்கு அறிவுரை கூறி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று அனுப்பி வைத்து விட்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஹரி தனது மனைவியை கொடுமைப்படுத்தி விவாகரத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இதன் பிறகு ஸ்ரீஹரி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அனுஷா தனது கணவருக்கு வீடியோ கால் செய்து கொண்டே, கணவர் லைனில் இருந்த போது தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த அனுஷாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்ன ர்அனுஷாவை தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அனுஷா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக சிகிச்சை பெற்று வந்த அனுஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதில் கணவர் கொடுமைப்படுத்தியதாலும், திருமண உறவை மீறி வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டதாக அனுஷா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் பேரில் அவரது கணவர் ஸ்ரீஹரியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

Previous articleதலையில் சிசிடிவி கேமராவுடன் வலம் வரும் இளம்பெண் சுவாரஸ்ய பிண்ணனி….!!
Next articleஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் அரக்கோணத்தில் பரபரப்பு….!!