நண்பர் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ரூ.14,000 கடனை திருப்பி கொடுக்காததால் நடந்த கொடூரம்….!!

2

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு தர்ஷன் (4), யோகித் (6) என இரு மகன்கள் உள்ளனர்.

யோகராஜின் நண்பர் வசந்த், யோகராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். இதேபோல் நேற்று மாலையும் வசந்த் 2 குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் இரவு வெகுநேரமாகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு யோகராஜ் போன் செய்தார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பயந்துபோன யோகராஜ் உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, ​​வேலூர் மாவட்டம், சிங்களப்பாடியில் உள்ள ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவில் பின்புறம் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தைகளின் சடலங்களை மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வசந்திடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யோகராஜிடம் 14,000 ரூபாயை வசந்த் கடனாக கொடுத்துள்ளார். அதைத் திருப்பிக் கேட்டபோது, ​​யோகராஜ் தர மறுத்துவிட்டார்.

இதனால் வசந்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அந்த ஆத்திரத்தில் யோகராஜின் குழந்தைகளை வசந்த் கொன்றது தெரியவந்துள்ளது.

Previous articleமூளையை வறுத்து சாப்பிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளி, விசாரணையில் அதிர்ச்சி….!!
Next articleதடுப்பூசி எதிர்வினையால் உருக்குலைந்த இளம்பெண்….!!