தடுப்பூசி எதிர்வினையால் உருக்குலைந்த இளம்பெண்….!!

3

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தடுப்பூசி எதிர்வினையாற்றியதால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ள நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட 23 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு டெட்டனஸ், நிமோகோகல் மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

அதன் பிறகு அவர் கடுமையான எதிர்விளைவுகளை அனுபவித்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த அலெக்ஸில் லோரென்ஸி எனும் இளம்பெண் பராக்ஸிஸ்மல் நோக்டர்னல் ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்.

இருப்பினும், தடுப்பூசி பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (VSRF) அறிக்கையின்படி, தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட அடுத்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.

உடனே வாந்தி, தற்காலிக குருட்டுத்தன்மை போன்ற ஆபத்தான அறிகுறிகளை அலெக்சிஸ் அனுபவித்துள்ளார். இது குறித்த அறிக்கைகளின்படி, அலெக்சிஸ் சிறப்பு சிகிச்சைக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அலெக்சிஸ், தானே தனது உடல்நிலையை ஆவணப்படுத்தி, டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்கள் வழியாக தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அலெக்சிஸின் பல வீடியோக்கள் தற்போது ட்விட்டரில் வெளிவந்துள்ளன.

இந்த வீடியோ காட்சிகளில் அவரது முகம் மற்றும் கழுத்தில் தடுப்பூசிகளின் ஆபத்தான எதிர்வினைகள் தெரிகின்றனர். அவரது கண்கள் மற்றும் நெற்றியில் வீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் தோல் கருப்பு-ஊதா நிறமாக மாறியுள்ளது.

அலெக்சிஸ் லோரென்ஸுக்கு மூன்று தடுப்பூசிகளின் காக்டெய்ல் வழங்கப்பட்டுள்ளது. அவை PNH க்கான சிகிச்சையாக வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எந்தவொரு சுகாதார அதிகாரியும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

Previous articleநண்பர் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ரூ.14,000 கடனை திருப்பி கொடுக்காததால் நடந்த கொடூரம்….!!
Next articleமனைவியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்….!!