கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்தார்.
நேற்று காலை பள்ளிக்கல்லில் வசித்து வந்த சரஸ்வதி அம்மா (50) என்பவரை அவரது கணவர் சுரேந்திரன் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
இது குறித்து போலீசாரின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் கழுத்தை அறுப்பதற்கு முன்பு அவரது கைகளை ஒன்றாகக் கட்டினார்.
அதன் பின்னர் கழுத்தை அறுத்து ச் செய்து விட்டு ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நேராக காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார்.
நேற்று வீட்டில் தம்பதியர் தனியாக இருந்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கொட்டாரக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்களது மருமகள் பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்த போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.